ஏக வல்லோன் அவன் இல்லம் அது பள்ளிவாசல்
வணக்கத்தின் சிறப்பிடம் பள்ளிவாசல்-இறைப்
பிணைப்புக்கும் அதுவே தலை வாசல் ..!.
(வாசல்....பள்ளிவாசல்..)
கடமையானது ஐந்து வக்தடா...
மடமை கொண்டு நீ மறந்திடாதடா..!.
நேற்று வரப்போவதில்லை...
நாளை நம் கையில் இல்லை..!.
எல்லாம் அவன் கையில் தானே ...
எதுவும் அசையாது தானே .!...
வாழ்க்கை உண்டிங்கு வல்லோன் அருளாலே...
அவன் துணையில்லாமல் அவனியில் நாமேது ...?
வணங்கப் புறப்படு !....
(வாசல்....பள்ளிவாசல்..)
வணக்கம் என்பது சுவனச் சாவியாம்
பிணக்கம் கொண்டு நீ தொலைத்திடாதடா...!
நம்மைத் தொழ வைக்கும் முன்பே...
நாமும் இறை தொழுதல் மாண்பே ...!
முறையாய்த் தொழுவோர்க்கு எங்கும்
இறையின் அருளூற்று பொங்கும்...!
வல்லான் அருள்பெற்றால் வாழ்வில் பயமேது ...?
வழிபாடு இல்லாமல் வாழ்வில் ஜெயமேது...?
வணங்கப் புறப்படு !....
வாசல்...பள்ளிவாசல்...தொழும் பள்ளிவாசல்..!
ஏக வல்லோன் அவன் இல்லம் அது பள்ளிவாசல்
வணக்கத்தின் சிறப்பிடம் பள்ளிவாசல்-இறைப்
பிணைப்புக்கும் அதுவே தலை வாசல் ..!.