-------_---------_-------_-------------------------
தூங்காத இரவும் பல உண்டு
துடிக்கின்ற துன்பம் பல உண்டு
பாங்கான மாநபி யைக் கண்டு
மகிழ்ந்தாலே பிணி தீரும் அன்று
தூங்காத இரவும் பல உண்டு
துடிக்கின்ற துன்பம் பல உண்டு
பாங்கான மாநபி யைக் கண்டு
மகிழ்ந்தாலே பிணி
தீரும் அன்று
இறை தந்த ஒளியாக வந்தாரே...!!
நிறைவான பெரு வாழ்வு தந்தாரே...!!
இறை தந்த ஒளியாக வந்தாரே..
நிறைவான பெரு வாழ்வு தந்தாரே..!!
குறை காண முடியாத கோமான் நபிப்பெருமானை நான் காணும் நன்னாளும் என்று...??
குறை காண முடியாத கோமான் நபிப்பெருமானை நான் காணும் நன்னாளும் என்று...??
தூங்காத இரவும் பல உண்டு
துடிக்கின்ற துன்பம் பல உண்டு
பாங்கான மாநபி யைக் கண்டு
மகிழ்ந்தாலே பிணி தீரும் அன்று
மக்காவில் முத்தாக மலர்ந்தாரே
மதினாவில் மஃமூதர் மறைந்தாரே...!
மக்காவில் முத்தாக மலர்ந்தாரே
மதினாவில் மஃமூதர் மறைந்தாரே...!
இறை தந்த மறை தந்து மறைந்தாலும் மறையாத
கண்மணியைக் காணும் நாள் என்று..??
இறை தந்த மறை தந்து மறைந்தாலும் மறையாத
கண்மணியைக் காணும் நாள் என்று..??
தூங்காத இரவும் பல உண்டு
துடிக்கின்ற துன்பம் பல உண்டு
பாங்கான மாநபி யைக் கண்டு
மகிழ்ந்தாலே பிணி தீரும் அன்று
எளியோன் என் கனவில் நீர் வருவீரே
ஒளியான திருக்காட்சி தருவீரே
எளியோன் என் கனவில் நீர் வருவீரே
ஒளியான திருக்காட்சி தருவீரே
கனவான அருங்காட்சி நனவாகி நான் காண நாயனருள் கிடைத்திடும் நாள் என்று...???
கனவான அருங்காட்சி நனவாகி நான் காண நாயனருள் கிடைத்திடும் நாள் என்று...???
தூங்காத இரவும் பல உண்டு
துடிக்கின்ற துன்பம் பல உண்டு
பாங்கான மாநபி யைக் கண்டு
மகிழ்ந்தாலே பிணி தீரும் அன்று