Saturday, November 1, 2014

முகவரி தொலைத்த முழுமைகள் ...!

செதுக்கும்போது 
சிதறித் தெறிக்கும் 
சிறு கற்களுக்குள்ளும் ஒளிந்திருக்கக்கூடும்
சிற்பியறியா
கலைநயமிக்க சிற்பங்கள்.....!


எழுதும்போது 
தெரிவு செய்யப்படாது 
நீக்கப்பட்ட வார்த்தைகளுக்குள்ளும்
ஒளிந்திருக்கக்கூடும் 
கவிஞனறியா ஆயிரமாயிரம் 
இலக்கிய நயங்கள்....!


படைப்புகளில் 
விடுபட்டுப்போன 
இக்கற்களும் சொற்களும் 
இயல்பில் 
பண்புயர் தியாகிகளே....!

..........................................................................

No comments: