Saturday, September 7, 2013

தனிமை கண(ன) அதிர்வுகள்..!

அச்சமூட்டி எச்சரித்து
அமிழ்த்திய போதும்

ஆழ்மனக்கடலை நச்செரித்து
அவ்வப்போது

உன் பெயரை உச்சரித்தே
அடங்குகின்றன
என் இதழலைகள்....!

நீ அற்ற தருணங்களின் ரணத்தில்
சுற்றம் மறந்துபோய்

சுகங்களின் கதவடைத்து
சோக ராகம் இசைத்த போதும்

வெற்று கணத்தின் வெறுமை போக்கிட
காற்று தாலாட்டிடும் ஜன்னலாய்

உன் சிந்தனை தெளித்துப் போகிற
மகிழ்வான நினைவுச் சிதறல்களில்

தார்மீகக் காரணங்களேதுமின்றி
முற்றும் நனைகிறதென் மனமாளிகை.....!

மண்ணாகவே இருந்தேன்...
உன்னைக் காணும் வரை

பார்வை விதை விதைத்தாய்
அவ்வப்போது....
புன்னகை நீருற்றி வளர்த்தாய்..

சேர்ந்தே இருப்போம் என்ற
நம்பிக்கை உரமிட்டு என்னை வலுப்படுத்தினாய்

உன் ஊட்டத்தில் வளர்ந்து
விருட்சமானது என் நேசம்....

இத்தனைக்கும் பிறகு...

எதிரியைப் போல்
பிரிவு விஷம் வைத்து
என்னைப் பட்ட மரமாக்கியதேனோ....?

No comments: