Monday, September 9, 2013

யா ரஸூலல்லாஹ்...!(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)



சத்தியத்தின் உருவே...யா ரஸூலல்லாஹ்...!
சமத்துவத்தின் கருவே...யா ரஸூலல்லாஹ்...!
படைப்புகளின் குருவே...யா ரஸூலல்லாஹ்...!
பண்புயர் அதிசயத் தருவே...யா ரஸூலல்லாஹ்...!

அற்புதங்களின் ஊற்றே...யா ரஸூலல்லாஹ்...!
அருட்கொடையின் காற்றே...யா ரஸூலல்லாஹ்...!
மன்னவனின் ஒளியே..யா ரஸூலல்லாஹ்...!
மதித்தேகும் நல்வழியே...யா ரஸூலல்லாஹ்...!

முஸ்லீம்களின் இதயத் துடிப்பே...யா ரஸூலல்லாஹ்...!
மூமின்களின் நீங்காப் பிடிப்பே...யா ரஸூலல்லாஹ்...!
வியப்பான நற்பிறப்பே...யா ரஸூலல்லாஹ்...!
விழுமிய சிந்தனைத் திறப்பே...யா ரஸூலல்லாஹ்...!

தீமைகள் தீண்டா மனிதமே..யா ரஸூலல்லாஹ்...!
திருமறையாய் வாழ்ந்த புனிதமே...யா ரஸூலல்லாஹ்...!
மதீனாவாழ் நாயகமே...யா ரஸூலல்லாஹ்...!
மன்பதையின் தாயகமே...யா ரஸூலல்லாஹ்...!

No comments: