Friday, April 6, 2012

மஃஹ்மூதரின் மாண்பினைப் போற்றிடுவோம்


மஃஹ்மூதரின் மாண்பினைப் போற்றிடுவோம்
-------------------------------------------------------------------------------------------------------------

க்கத்துச் சோலையில் மாணிக்கமாய் மலர்ந்து
மாந்தர்தம் உள்ளங்களில் மன்னராய் மகுடம் சூடி
மிஹ்ராஜ் இரவினில் மேலோனைக் கண்டு மீண்டு
மீசானில் கனமாக்கும் தொழுகையை நமக்களித்து
முன்னோரின் சிலை வணக்கம் முற்றிலும் ஒழித்து
மூப்பில்லா இறையோனின் ஒருமைப் பண்புணர்த்தி
மென்மை வாய்மை தகைமையுடன் தீனை
மேன்மையாய் மக்கள் உள்ளங்களில் வளரச் செய்து-உலகத்தின்
மையலில் கறை படிந்த இதயங்களையெல்லாம் -தன்
மொழியமுதம் கொண்டு சுத்தப் படுத்தி -இம்மையின்
மோகங்களை விட்டும் மக்களைத் தூரமாக்கி
மெளலாவாய் எம்மை நேர் வழி நடத்தும்- மதீனா வாழ்
மஃஹ்மூதரின் மாண்பினைப் போற்றிடுவோம்.

அல்லாஹீம்ம ஸல்லி அலா முஹம்ம தினின் நபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலிஹி வஸல்லிம் தஸ்லீமா,,,,!

No comments: