Wednesday, April 18, 2012

அருளென்ற மழையிலே....!


அருளென்ற மழையிலே....!


அருளென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அருமை நபி தோன்றினாரே....!
அருளாளன் இறைவனின் அன்புநிறைத் தூதராய் அகமதுவும்
தோன்றினாரே....!
அனலான பாலையில் புனலொன்று தோன்றுமோ அழகுநபி தோன்றினாரே....!
மக்காவின் மீதினில் மாண்புயர் மன்னராய் மஹ்மூதர் தோன்றினாரே...!

அருளென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அருமை நபி தோன்றினாரே...!
இருளான மாந்தர்தம் இதயங்கள் ஒளிரவே இனியநபி தோன்றினாரே...!
(இனியநபி தோன்றினாரே...! )

சூரியனும் சந்திரனும் ஒன்றாகித் தோன்றுமோ ஒளிநபிகள் தோன்றினாரே...!
தூய்மையும் வாய்மையும் ஒன்றான தன்மையாய் தாய்நபிகள்  தோன்றினாரே...!
கஷ்டங்கள் போக்கிடும் சலவாத்தின் காரணராய் கவின் நபிகள் தோன்றினாரே...!
நஷ்டங்கள் இன்றியே நம்மைக் கரைசேர்த்திட நாதர்நபி தோன்றினாரே...!
  
 அருளென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அருமை நபி தோன்றினாரே....!
அருளாளன் இறைவனின் அன்புநிறைத் தூதராய் அகமதுவும்
தோன்றினாரே....!
அனலான பாலையில் புனலொன்று தோன்றுமோ அழகுநபி தோன்றினாரே....!
மக்காவின் மீதினில் மாண்புயர் மன்னராய் மஹ்மூதர் தோன்றினாரே...!



No comments: