Saturday, March 10, 2012

மதீனாவிற்குச் செல்லும் வரம் வேண்டும்...


மதீனாவிற்குச் செல்லும் வரம் வேண்டும்...

மக்காவில் வந்துதித்த மாணிக்கக் கோமானே….!

மதீனாவில் உறைகின்ற மாண்புநிறைச் சீமானே…!

தக்காரும் மிக்காரும் இல்லா தகையாளரே..எம்மானே…!

திக்கனைத்தும் தீனுல் இஸ்லாம் பரவச் செய்த எம் பெருமானே….!

திகட்டாத தமிழ்கொண்டு தங்களைப் பாடுகிறேன் அடியேன் நானே…!

மிகைத்திட்ட ஆவலில் தங்களைக் காண விழைகின்றேனே….!

எம் காதல்பிணி தீர மதீனாவிற்கெமை அழைத்திடுவீர் அண்ணலே….!

தங்கள் திருமுகம் தினமும் காணும் வரம் தருவீர் மாமன்னரே…!

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ரஸூலல்லாஹ்..!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஹபீபல்லாஹ்…!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஃஹைர ஃகல்கில்லாஹ்..!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஸைய்யிதுல் அன்பியாயி வல் அவ்லியாயி…!

No comments: