Tuesday, March 13, 2012

பரிசுத்த நபி மீது பாசம் கொள்வோம்..!


பரிசுத்த நபி மீது பாசம் கொள்வோம்..!

கை கொண்டு சொல்லொணாத் துன்பங்கள் பல தந்திட்ட

பாவிகளையும் மன்னித்தருளிய கருணைக் கடலே…!- அடிமை

பிலால் மீது அளவிலாப் பிரியம் கொண்டு - மாந்தரிடம்

பீடித்திருந்த உயர் குலக் கர்வம் கொன்றவரே....!

புண்ணியம் பெற்ற ஸஹாபாத் தோழர்களை

பூமியோர்க்கு வழிகாட்டும் விண்மீன்களாக ஆக்கிச் சென்றவரே..!.

பெருமையுடன் எளிமையாய் வாழ்ந்திட்ட பெருமானே...!

பேரோங்கும் மிஹ்ராஜ் துவக்கத்தில் - நபிமாரனையோர்க்கும்

பைத்துல் முகத்தஸில் இமாமாகி இறையை வணங்கிய இனியவரே...!

பொற்குணங்களின் தாயகமென்றும் வள்ளலென்றும்- குவலயம்

போற்றிடும் புகழுடன் என்றும் திகழ்பவரே…!

பெளர்ணமி நிலாவையும் மிஞ்சும் ஒளிகொண்டவரே...!

பஃக்தாத் முஹையத்தீன் உள்ளிட்ட இறைநேசர்களின்

பாசத்திற்கும் பிரியத்திற்கும் உரித்தான பண்பாளரே...!


அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ரஸூலல்லாஹ்..!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஹபீபல்லாஹ்…!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஃஹைர ஃகல்கில்லாஹ்..!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஸைய்யிதுல் அன்பியாயி வல் அவ்லியாயி…!

No comments: