கரையும் நேரம்
பரஸ்பரம் காத்திருத்தலில்
கனமாகக் கரைகிறது
காதலர்களின் நேரம் !
இருள் கவிந்த இரவின் வரவை
எதிர்நோக்கிக் கரைகிறது
ஆந்தை போன்ற ஜந்துக்களின் நேரம் !
கடல் மீண்டு கரை திரும்பும்
கணவனைச் சேர்ந்திட
மாலைக் கருக்கலை எதிர்பார்த்து
கரைகிறது இல்லாளின் நேரம் !
அன்றாட நிகழ்வுகளாகிவிட்ட
இவற்றின் காத்திருப்பு வலிகளொன்றும்
நம்மை வியப்பில் ஆழ்த்துவதில்லை..
பெரிதாய்த் துக்கப் படுத்துவதில்லை !
ஆனால்...
அன்றாட வாழ்விற்குப் பொருளீட்டிட
பொழுது இருட்டுவதை மட்டுமே
எதிர்நோக்கிக் கரைகின்ற
திருடனின் நேரம்,விலை மாதுவின் நேரம் !
இவைகள் மட்டுமே
இங்கு விசனப் படுத்தும் பொழுதுகளாய்...
காலம் தவிர்க்காத பழுதுகளாய்...
காலமெல்லாம் ஆகிப் போயின !
No comments:
Post a Comment