Sunday, March 18, 2012

கரையும் நேரம்


கரையும் நேரம் 

பரஸ்பரம் காத்திருத்தலில் 
கனமாகக் கரைகிறது

காதலர்களின் நேரம் !

இருள் கவிந்த இரவின் வரவை 
எதிர்நோக்கிக் கரைகிறது 
ஆந்தை போன்ற ஜந்துக்களின் நேரம் !

கடல் மீண்டு கரை திரும்பும் 
கணவனைச் சேர்ந்திட 
மாலைக் கருக்கலை எதிர்பார்த்து 
கரைகிறது இல்லாளின் நேரம் !

அன்றாட நிகழ்வுகளாகிவிட்ட
இவற்றின் காத்திருப்பு வலிகளொன்றும் 
நம்மை வியப்பில் ஆழ்த்துவதில்லை..
பெரிதாய்த் துக்கப் படுத்துவதில்லை !

ஆனால்... 

அன்றாட வாழ்விற்குப் பொருளீட்டிட

பொழுது இருட்டுவதை மட்டுமே 
எதிர்நோக்கிக் கரைகின்ற 
திருடனின் நேரம்,விலை மாதுவின் நேரம் !
இவைகள் மட்டுமே 

இங்கு விசனப் படுத்தும் பொழுதுகளாய்...
காலம் தவிர்க்காத பழுதுகளாய்...
காலமெல்லாம் ஆகிப் போயின !





No comments: