அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல
அல்லாஹ்வின் திருப்பெயரால்..............
அண்ணலே எம் பெருமானே......!
அனைத்து நற்குணங்களும் ஒன்றாய் அடிபணிந்தனவே தங்கள் சிறப்பினால்
அகிலத்திற்கே அருட்கொடையாய் வந்த சீமானல்லவா தாங்கள்
அற்ப மானிடர்கள் அறியா ஆன்மீகப் புதையலல்லவா தாங்கள்
நிகரற்ற இறையோனும் பாசம் கொண்டான்- தங்கள் மேல்
நிரப்பமாய் ஸலாம் எனும் நிரந்தர மழை பொழிகின்றான்
விருப்பமாய் விண்ணோரும் ஸலாம் கூறுகின்றனர் - இதை
விண்ணிருந்து வந்த திருமறையும் பறை சாற்றுகின்றது.
மாசில்லா மாந்தருள் மாணிக்கமே எங்கள்
மஹ்மூது நபி வள்ளலே எங்கள் ஸலாம் ...!
யா நபி ஸலாம் அலைக்கும்...!
யா ரசூல் ஸலாம் அலைக்கும்...!
யா ஹபிப் ஸலாம் அலைக்கும்...!
ஸலவாதுல்லா அலைக்கும்...!
-----------------------------------------------------------------
No comments:
Post a Comment