அஹமதைக் காண்பேனா......?
அழகுக் கெல்லாம் அழகு இலக்கணமாய்
அவனியில் அனையோர்க்கும் அருட்பிழம்பாய்
மேன்மை என்பதன் அகராதிப் பொருளாய்
வாய்மை என்பதன் உவமையாய்
தூய்மை என்பதன் நிரந்தரச் சொந்தமாய்
வற்றிய பாலையில் வளம்நிறைச் சோலையாய்
வந்துதித்த வள்ளல் எங்கள் நபிகள் பெருமான்
தங்கள் முக ஒளிவெள்ளத்தில் எம் அகம் குளிப்ப தெந்நாள்..?
---------------------------------------------------------------------
No comments:
Post a Comment