Tuesday, February 21, 2012

ஸலவாத்துகளைச் சமர்ப்பிப்போம்



ஸலவாத்துகளைச் சமர்ப்பிப்போம்




த்திய சன்மார்க்கப் போதனை செய்தே - சரித்திரச்

சாதனை நிகழ்த்திட்ட சாந்த நபி இவர்........!

சிறப்பாய் சீராய் வாழ்ந்திட்ட புண்ணிய சீலரிவர்….!

சீக்குகள் நிறைந்திருந்த மாந்தர்தம் உள்ளங்களை

சுத்தக் குர்ஆனின் சுகந்தம் கொண்டு நலமாக்கியவர்.....!

சூழ்ந்திட்ட துன்பங்கள் பகைகள் அனைத்தையும்

செறிந்த வீரத்தால் விவேகத்தால் வென்றவர்..!

சேதாரம் ஏதுமின்றி செழுமையுடன் இஸ்லாம் வளர்த்தவர்..!

சொல் செயல் எண்ணத்தை தூய்மையாய் வைத்துக் கொண்டவர்..!

சோக அனுபவங்களையும் சுகமான வரலாறுகளாய் மாற்றியவர்...!

செளஜன்யமும் சமாதானமும் வாழ்வு நெறியாகக் கண்டவர்..! _ இம்மையின்

சஃக்ராத்து வேளையிலும் உம்மத்தாம் நம் கவலை கொண்டவர்...!

எங்கள் நபி நாதர்…….ஏந்தல் முஹம்மது அவர்கள்..!

சாந்தியும் கருணையும் தம் மீது இறையோனால்

என்றும் மழையாக இறைக்கப் பெறும் சீமானாம்

மதீனாவில் வாழுகின்ற மாண்புயர் கோமானாம்

பாராளும் மன்னரெங்கள் அஹமதின் பாதங்கள் மீது

பாசத்துடன் சமர்ப்பிப்போம் பணிவான நமது ஸலவாத்துகளை...!



No comments: