Wednesday, February 15, 2012

நெஞ்சு பொறுக்குதில்லையே.......


நெஞ்சு பொறுக்குதில்லையே.......


அய்யா சமுதாயக் கனவான்களே ,


கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் உங்கள் கண்ணான பிள்ளைகள் மீது.......


பெற்றோம் ......வளர்த்தோம்..... படிக்க வைத்தோம்... திருமணம் முடித்தும் வைத்தோம் ..... அத்துடன் கடமை முடிந்து விட்டது என்று நினைக்கிறீர்களா ....?


அதுதான் இல்லை 


கொஞ்சம் இந்த நாகரீகம் நாறிப் போன சமுதாயச் சூழலை எண்ணிப் பாருங்கள்.....நிச்சயம் நமது கடமை பகுதி கிணற்றில் தொங்கிக் கொண்டிருப்பது நன்றாகப் புலப்படும்.


அனைத்துத் துறை கல்வியும் கற்பித்து மணமுடித்தும் வைத்த நம் பிள்ளைகளுக்கு இன்னும் கற்பிக்கப் படாத கல்வியாய் கற்பு நெறி ஒழுக்கம் இருப்பதை நாம் கண் கூடாகக் காண முடியும்.


மணம் புரிந்தும் மணாளனின் 
மனம் புரியாது மாற்றானின் துணை நாடும் மங்கையர் சில பேர் ......


நெருக்கமாய் காட்டிக் கொண்டும் 
நெஞ்சினுள் வஞ்சம் வைத்தே 
மிஞ்சிப் படியும் தாண்டிடும் மிகைத்த மாதர் சில பேர் .......


நேற்று வரை நல்லவனாய் நடமாடிய 
அண்டை வீட்டு அழகு வாலிபன் 
பிறர் மனை கூடி ஓடிய கேவலச் செயலால் 
இன்று ஊரார் வாய் முழுக்க 
மெல்லப்படும் அவலானான்.


அவலம்......பெரும் அவலம் .....


கற்பு,ஒழுக்கம் ,கண்ணியம் என்பதை இனி 
அகராதியில் மட்டுமே காணமுடியும் போலிருக்கிறது.


அடுத்த தெரு வரை நெருங்கி வந்த ஆபத்து வெள்ளம் 
நம் சொந்த வீட்டினை அடையுமுன் உரிய பாதுகாப்பினை உறுதி செய்வோம். 


பெற்ற பிள்ளைகளை பேணி வளர்ப்போம் 
அவர்தம் சுய ஒழுக்கமும் பேணிட வைப்போம்.


இவ்வாறெல்லாம் நினைக்கும் படி வைத்திட்ட இழியோர் 
சிலரின் செயல் கண்டு 
நெஞ்சு பொறுக்குதில்லையே........!

No comments: