Wednesday, February 15, 2012

மனிதா...ஓ...மனிதா ...நீ மாறி விடு....!


மனிதா...ஓ...மனிதா ...நீ மாறி விடு....!


நன்மையும் தீமையும் பிரித்தறியும் ஆற்றல் கொண்டு நானிலம் தன்னில்  நாகரீக உலா வரும் மனிதன் நன்மையை மட்டும் பிறர்க்காய் நாடுகிறானா என்றால் பெரும்பாலான பொழுதுகளில் இல்லவே இல்லை என்றே பதில் கிடைக்கும் .


மனிதன் பல வேளைகளில் தீமைகள் கொண்டே பிறரைத் தீண்டுகிறான்.அவன் மனம் முழுதும் அழுக்கான எண்ணங்கள் .அவற்றின் விளைவாய் உருப்பெறும் இழுக்கான பல செயல் வண்ணங்கள்.அவை தோற்றுவிக்கும் கருப்பான எதிர் விளைவுகள் என தாழ்நிலை நோக்கியே அவன் பயணம் முழுதும்.....


நாகரீக மோகம் கொண்டு ஐந்தறிவுப் பிராணிகளும் செய்திடாத அருவருப்பான செயல்களையும் ஆறறிவுடன் பிறந்த மனிதன் நாணமின்றிச் செய்கின்றான்......


சற்றே சிந்திப்போம்....


விலங்குகளும் நமைப் பார்த்து நகைக்கும் போக்கல்லவா ....இது......விளக்கம் கற்பிக்க இயலா விந்தையிலும் விந்தையல்லவா.........இது ?


எதற்காய் மானிடப் பிறப்பெய்தினோம்......? நாம் எவ்வாறு வாழ்ந்திட வேண்டும்....?


சிந்தை தெளிந்து மனிதம் புரிந்திட முயற்சிப்போமா..?


நம் வாழ்வு நெறியை சற்று மாற்றி அமைப்போம் இவ்வாறு.


நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் நிர்வாண ஆடை வேண்டாம்
நகை சுமக்கும் காட்சிப் பேழையாய் நம் பெண்கள் நடக்க வேண்டாம்  
புன்னகையில் பொன்னகை செய்வோம் 
கனிவுப் பேச்சினில் பிறர் உள்ளங்கள் வெல்வோம் 
மதங்கள் நம்மை நெறிப்படுத்தட்டும் நல்ல மனிதர்களாய் 
மதம் கொண்டு நெறி தவற வேண்டாம் நாம் மிருகங்களாய் 


வாழும் நாட்களை தீமைகளில் பாழாக்காமல் என்றும் நன்மைகளை சேமிப்போம் ..
மனித நேயம் வளர்ப்போம்..பொதுநலம் பேணி மானுடம் காப்போம்
நல்லவை விரும்புவோம்.அல்லவை தவிர்ப்போம் 
இக பர வாழ்வை வெல்வோம்.



வாருங்கள் தோழர்களே...!



No comments: