Wednesday, February 15, 2012

நீயே என் எதிர்காலம்


உள்ளம் உருகச் செய்யும் , இருதயத்தில் ஈரம் கசியச் செய்யும் காட்சி இது 
இது பற்றிய எனது பின்னூட்டம்.......
நீயே என் எதிர்காலம் 

அன்புச் செல்வமே 
ஆருயிரே தங்கமே
நேர்ந்து தவமிருந்து 
நான் அள்ளிய வைரமே....!

அன்னை துயருணர்ந்து
அமுதூட்டும் உன் கைகள் 
பிள்ளைக் கனியமுதே உணர்வாய் 
என் நாளையின் நம்பிக்கைகள் அவை....!

தாய் பிள்ளைக்கு ஊட்டும் 
காட்சி இங்கு தலை கீழாய்...!
வையகம் காணாத காட்சியை 
வரலாறாக்கினாய் என் செல்லமே ....!

கைம்மாறு எண்ணாமல் உதவி 
கனிவுடன் கவனிக்கிறாய் அன்னையாய்.....!
தரணியிலும் உனக்கு சொர்க்கம்தான்
தரமான என் சொக்கத் தங்கமே நீ கேளாய் .....!

----------------------------------------------------------------------------




No comments: