Friday, February 24, 2012

என்னவென்று சொல்வதம்மா...?



என்னவென்று சொல்வதம்மா...?

என்னவென்று சொல்வதம்மா அண்ணல் நபிப் பேரழகை...!
சொல்ல மொழி இல்லையம்மா மன்னர் நபி நூரழகை...!
அந்த வெள்ளி முகத்தவரை எம் உள்ளம் நிறைந்தவரை
நான் என்னென்று சொல்வேனோ... அதை எப்படி சொல்வேனோ..?
அவர் தாம் முஹம்மதெங்கள் நபி நாதராம்...!
ஆதி இறையோனின் அன்புநிறைத் தூதராம்...! 


என்னவென்று .....


பொன்னான மேனியின் கஸ்தூரி வாசமே
பூலோகம் மீதினில் பூமாரி வீசுமே
முகவொளி வெள்ளம் பார்த்து வெட்கிப் போகும் வான்மதி 
தகைநிறை உள்ளம் பார்த்து வற்றிப் போகும் நைல்நதி 
ஏந்தல் நபிநேசம் அதுவே எங்கள் சுவாஸம்
அவர் தாம் எங்கள் பாவக் கறைகள் நீக்குவார் 
அடியோரெம்மை சொர்க்கக் கரையில் சேர்க்குவார் 


என்னவென்று .....


மதீனாவில் வாழ்ந்த்திடும் மன்பதையின் காவலர்
நம்நாவில் மொழிந்திடும் ஸலவாத்தின் நாயகர் 
புர்கானை உலகத்தோர்க்கு மறையாகத் தந்தவர்
புவிவந்த தூதர்க்கெல்லாம் தலையாகி நின்றவர் 
அருமை நபி இதயம் ஆன்மீக ஒளியின் உதயம்
அவர் பிறந்த இடம் அரேபியாவின் மக்காவாம்
அவர் தாம் எங்கள் அன்புநிறைத் தாஹாவாம்.....



என்னவென்று சொல்வதம்மா அண்ணல் நபிப் பேரழகை...!
சொல்ல மொழி இல்லையம்மா மன்னர் நபி நூரழகை...!
அந்த வெள்ளி முகத்தவரை எம் உள்ளம் நிறைந்தவரை
நான் என்னென்று சொல்வேனோ... அதை எப்படி சொல்வேனோ..?
அவர் தாம் முஹம்மதெங்கள் நபி நாதராம்...!
ஆதி இறையோனின் அன்புநிறைத் தூதராம்...! 


1 comment:

syed shah hameed said...

niraiyavey (niraivai) marri viteer