தொடங்குவோம் முதலில் இந்தச் சோதனை......
வாழ்க்கையில் விரக்தி
முயற்சியில் அயர்ச்சி
மனத் தடுமாற்றம்
கொள்கை குழப்பம்
நோவு நொம்பலங்கள்
நொடிந்த வாணிகம்
வருத்தும் வறுமை.......
இத்தனை இயலாமைகள் ,இல்லாமைகள் ஏன் ...?
விதியின் சதியென்று விலக்காதீர்........
பொழுதை வீணாய்க் கழிக்காதீர்.....
கல்வியின்மை ,ஆர்வமின்மை,முயற்சியின்மை ,திறமையின்மை
என நம் இன்"மை" களின் எண்ணிக்கை ஏற்றம்தான் காரணங்கள்
தொடர்ச்சியாய் நம்மைச் சூழ்ந்திடும்
சோதனைகள் வேதனைகள் அனைத்தும் மாறிட
முதலில் சுய பரிசோதனை செய்து கொள்வோம்
இன்மைகள் அனைத்தும் இல்லாமலாக்குவோம்
தோல்விப் படிகளேறி வெற்றிக் கனி பறிப்போம்
தொடங்கட்டும் இன்று முதல் சுய பரிசோதனை
வரலாற்றில் நாளை பதிவாகட்டும் நம் வாழ்வின் சாதனை.
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment