இது பள்ளிப் பருவத்தில் அவ்வப்போது
துள்ளி எழுந்த எண்ண அலைகளையெல்லாம்
எழுத்தில் கரை சேர்க்க முயற்சித்தபோது
முதல் பிரசவமாய் கனிந்தது......
புதுக்கவிதை
இது.........
வார்த்தைகளால் தீட்டப்படும் வண்ண ஓவியம்
வர்ணனைகள் பலநிறைந்த வசந்த காவியம்
கருத்துமலர்களால் கோர்க்கப்படும் கதம்பம்
மனம் கொண்ட கற்பனையின் மறுபிம்பம்
அளவில் குறுகியும் ஆழமாய்ப் பொருள் விளக்கும்
நடையில் நீண்டும் நளினமாய் சுவை நல்கும்
சுருங்கக் கூறின்
புதுக்கவிதை.......
இது
மரபுகளால் இன்றும் மடக்கப்படாத ஒரு பாவகை
பன்மலர்ச் சோலையில் என்றும் வாடாதிருக்கும் ஒரு பூவகை.
-----------------------------------------------------------------
No comments:
Post a Comment