Sunday, February 19, 2012

நபி புகழ் பாடுவோம்...நன்மைகளைத் தேடுவோம்


நபி புகழ் பாடுவோம்...நன்மைகளைத் தேடுவோம் 

ண்மணியாம் எங்கள் ரசூல் நாயகமே...!

காசு பணம் நீங்கள் சேர்க்கவில்லை மேதினி வாழ்வினிலே ...

கிழிந்த ஓலை விரிப்புதான் தங்கள் படுக்கை 

கீறல் நிறை மண் குடிலே தங்கள் மாளிகை -இவ்வாறான 

குவலயம் போற்றிடும் தங்கள் எளிமை வாழ்க்கை .

கூறிச் சென்றீர்கள் குர்ஆனும் தங்கள் வழிமுறையும் இனிதாய் -எனினும் 

கெட்ட எமதுள்ளங்களில் அவை நிறைந்திடவில்லை முழுதாய் -அதனாலே 

கேள்விகள் பல எழுப்புகிறோம் இன்று தங்கள் நடைமுறை மீது 

கைகழுவி விட்டோம் தங்கள் மேலான கோட்பாடுகளை 

கொள்கைகள் பலவும் கொண்டோம் சொந்தமாய் -ஆனாலும் 

கோடிகள் எமதாக்கிக் கொண்டோம் தங்கள் மூலமாய் -போலி 

கௌரவம் கண்ட இறுமாப்பில் தங்களை மறந்தோமே அண்ணலே ....!


போதுமே நபி போதம் மறந்த நமது போதனைப் புலம்பல்கள்...

போதுமே அவர் புகழ் மறைத்த நமது இரைச்சல்கள் ....இனியேனும் 

நிறுத்துவோம் இவையனைத்தையும் உண்மை நபிநேசம் கொண்டு 

செலுத்துவோம் நம் சிந்தனையை இறைத்தூதர் வழிமுறை கண்டு 

புண்ணிய வேந்தராம் புகழ்நிறை அஹமதாம் 

மண்ணிலே வந்துதித்த மாந்தர்க்கெல்லாம் மன்னராம் 

கண்மணி எமதருமை நாயகப் பொன்மணியின் 

கண்ணியம் போற்றிடுவோம் வாருங்கள் தோழர்களே....!


No comments: