Wednesday, February 15, 2012

மாநபியே எங்கள் ஸலாம்


மாநபியே எங்கள் ஸலாம் 
மண்ணகமும் போற்றுதே! ....தங்களை 
விண்ணகமும் போற்றுதே! 
கண்மணி ஆமினா ஈன்றெடுத்த கனியமுதே....!
கவிஞர்கள் பாடிடும் கறையில்லா மஹ்மூதே....!
புண்ணியம் செய்ததால் உங்கள் உம்மத்தானோம்....இருந்தும் தங்களை 
கண்ணியம் செய்வதில் ஏன் ஊமைகளானோம்.....? 
எம்மை மன்னியுங்கள் மாமன்னரே!
எங்கள் உயிர்கள் அனைத்தும் தங்களுக்கே அர்ப்பணம் 
ஏற்றிடுவீர் எமது சலாமனைத்தும் தங்களுக்கே சமர்ப்பணம்....
யா நபி ஸலாம் அலைக்கும்...!
யா ரசூல் ஸலாம் அலைக்கும்...! 
யா ஹபிப் ஸலாம் அலைக்கும்...!
ஸலவாதுல்லா அலைக்கும்...!
----------------------------------------------------------------



No comments: