Wednesday, February 15, 2012

சோகமும் மேகமும்

Sun and Rain :} Pictures, Images and Photos

சோகமும் மேகமும்

உச்சி வெயிலில் வெகு தூரம் நடந்த களைப்பில் 
வழியில் கண்ட திண்ணையில் அமர்ந்தேன்.


வியர்வையில் உடல் குளித்த மணம்
நாக்கு வறண்டு நலிந்திருந்த அந்தத் தருணம்...


தாகம் தீர்த்திடத் தண்ணீர் தேடிய வேளையில் 
எங்கிருந்தோ பறந்து வந்த கூரிய கல்லொன்று 
என் இடது கன்னத்தைப் பதம் பார்த்தது..
கன்னத்து சதையை இடம் பெயர்த்தது.....! 


கன்னத்திலிருந்து குருதி மழை....!
வேதனையில் 
கண்களிலிருந்து கண்ணீர் மழை...!


சோக மேகங்கள் எனைச் சூழ்ந்த அவ்வேளையில் 
வான மேகங்கள் சூரியனைச் சூழ்ந்து மறைத்தன.. 


வறுத்தெடுத்த சூடுகதிர்களை வழியனுப்பிவிட்டு 
வானம் வரவேற்கத் துவங்கியது இருளை... 


கறுத்த மேகங்கள் கை கோர்த்தன ...
மின்னல் வெட்டியது...
இடி முரசாய்க் கொட்டியது...


இப்போது 
வானம் ஆர்ப்பரித்து அழுகிறது மழையாய் 
எனக்காக ......
என் சோகம் முழுதும் உள்வாங்கியது போல் ........
-------------------------------------------------------------------------------------------------------------

No comments: