இணைய நட்புகளே….! சற்று கவனிப்பீர்…..!
நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் நமது சமுதாய நிலைமை நாறிப் போன தற்காலத்தில் இணையம் உட்பட அனைத்து ஊடகங்களின் வழியே கண்காட்சிப் பொருளாகக் கவர்ச்சியும் மலிவு விற்பனைப் பொருளாகக் கற்பும் காட்டப் படும் நிலை மாறாத வரை நாம் கண்ணியம், கற்பு நெறி, ஒழுக்கம் இவைகளை எழுத்தில் மட்டுமே காண முடியும் போலிருக்கிறது.
நெடிய இணையப் பாதையில் எப்பொழுதும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் பயணிக்க வேண்டியிருக்கிறது.திரும்பும் திசைகளனைத்திலும் தீயவன் சைத்தானின் வலைப் பின்னல்கள்.கொஞ்சம் பிசகினாலும் நம் ஈமானைப் பறிகொடுக்க வேண்டிய சூழ்நிலை.
இணையத்தில் சமூக வலைத் தளங்களின் உருவாக்கம் பல நன்மைகளைத் தருகின்ற அதே வேளையில் இவ்வகைத் தளங்களால் சில தீய விளைவுகளும் இருக்கத் தான் செய்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.இவை பற்றி விவரிக்க வேண்டிய அவசியமில்லை.அனைவரும் அறிந்ததே.
எனவே, தோழர்கள் இணையப் பாதையில் பயணிக்கும் வேளையில் எப்பொழுதும் விழிப்புடன் செயல்பட்டு காவலாக இறையச்சத்தையும் மற்றும் வழித் துணையாக இறைத் தூதர் நெறிமுறைகளையும் கொண்டு சைத்தானின் சூழ்ச்சிகளை வென்று பயணிக்க வேண்டுகிறேன்.
நட்புடன்
அபுஸாயிமா
No comments:
Post a Comment