Wednesday, February 15, 2012

எனதூர் கடையநல்லூர்!.


எனதூர் கடையநல்லூர் !. 

பெயர்க்காரணம் மட்டுமல்லாது
பிறந்து வாழும் மக்கள் செயலாலும்
என்றும் நல்லூராய்த் திகழும் எனதூர்
ஏனோ சில காலமாய்
மனம் வெதும்பி அழுகின்றது
எங்கே தன் நற்பெயர் நழுவிவிடுமோ என்று....
என்ன காரணம் ......?

இதோ....

பண்டைக் காலம் தொட்டு
நீதி நெறியும் கற்பு நெறியும்
வழுவாத மக்களால்
நிறைந்து காணப்பட்ட எனதூரில்
சமீப காலங்களில்
நாகரீக மாற்றத்தால் ஏற்பட்ட
ஒழுக்கக் கேடுகள்......

சுருங்கக் கூறின்
இன்று எனதூரில்
கடனுக்கு வட்டியாய்
கற்பும் நியாயமாகிப் போனது.........
கள்ளக் காதலும்
ஓடிப் போகலும்
தினசரி நிகழ்ச்சி நிரலாகிவிட்டது.

வேறென்ன வேண்டும் எனதூரின்
பெயர் கெட்டுப் போவதற்கு...?

எங்கே போயினர் எனதூரின்
கண்ணியம் நிறை கனவான்கள்...?

அவர்களின் சுய கண்ணியக் குறைவால்
கண்டும் காணாதிருக்கிறார்களா......?

எங்கே போயின எனதூரின்
எழுச்சி நிறை இயக்கங்கள்......?

பெயரில் மட்டுமே இயக்கம் கொண்டு
முடங்கிப் போய் விட்டனவா...?

இந்த துயரமான சூழலில்
நாம் செய்ய வேண்டியதென்ன.....?

எனதூரின் இனிய சொந்தங்களே
சற்று சிந்திப்பீர்....

இப்போதுள்ள மக்களையும்
இனிவரும் சந்ததியையும் பாதுகாத்திட
இனியேனும் முயற்சி செய்வோம்

எவ்வாறு....?

நம் பிள்ளைகளுக்கு
உலகக் கல்வியுடன்
மார்க்கக் கல்வியும்
முறையாய்க் கற்பிப்போம்

பள்ளி செல்லும் பிள்ளைகளிடம்-
பணிவாய் நடக்கச் சொல்வோம்

கல்லூரி செல்லும் பிள்ளைகளுக்கு
கற்பு நெறி வழுவா ஒழுக்கம் கற்பிப்போம்

பாசமில்லா ஆபாசமெனும்
பாவி ஷைத்தானின்
வலையில் வீழாது
கவனமாய்க் கண்காணிப்போம்
கயவர்களின் காம வலை வீச்சிலிருந்தும்
பாதுகாப்போம்......

பருவ வயதுப் பிள்ளைகள் மற்றும்
வீட்டிலுள்ள பெண்களிடம்
தொல்லை தரும்
தொலைக்காட்சி,
தொலை பேசி மற்றும்
அலை பேசிகளின்
கேடு குறித்தும்
எடுத்துரைப்போம்.....
திருந்தாவிடில்
இடித்துரைப்போம்,

இவ்வாறெல்லாம் முயற்சி
செய்தால்
பிற்கால சமுதாயத்தை
பிறரின் ஏளனத்திலிருந்து மட்டுமல்ல
நமது சமூகச் சீரழிவிலிருந்தும்
பாதுகாக்கலாம்....
நினைவிருக்கட்டும்.......
நாளை மறுமையில்
இறைவனின் முன்னிலையில்
நாம் அனைவரும் பதில்
சொல்ல வேண்டி வரும்
நமது பொறுப்பில் உள்ளவர்க்கும் சேர்த்து ......
எனவே
சிந்திப்பீர்
கவனத்துடன்
விரைந்து
செயல்படுவீர்...

இந்த வேண்டுகோள்
எனதூர் வாழ் மக்களுக்கு மட்டுமல்ல
எல்லோர்க்கும் தான்....

ஏனெனில்
இன்று நாங்கள்
நாளை நீங்கள்....
எல்லோரும் ஓர்நாள்
இறைவனிடம்.........

----------------------------------------------------------------------------

No comments: