Wednesday, February 15, 2012

முரண் சிந்தனை


பள்ளிப் பருவ சிந்தனைகள்....... தொடர்கின்றன.


முரண் சிந்தனை


வீதி வழி சென்று கொண்டிருந்த என் பார்வையில் 
பாதை நடுவில் அசையாதிருந்த கூரிய கல்லொன்று பட்டது.
பாத சாரிகளின் நன்மை கருதி அதைப் 
பாதையோரம் பணித்திட எண்ணினேன்...


கல்லை நோக்கி குனிந்திட்ட என்னை 
கண்டனக் குரலொன்று தடுத்திட்டது...
"ஏன்டா இந்த வயதிலுமா 
இந்த சிறுபிள்ளை விளையாட்டு?"


குரல் வந்த திசை நோக்கி நிமிர்ந்திட்டேன்.... 
கண்டனத்திற்கும் கடும் குரலுக்கும் காரணம் புரிந்தது ..


குரல் தந்தவர் அருகில் குட்டி நாய்கள் இரண்டு!...........


என் சொல்வேன் என்னிலையை? 
------------------------------------------------------------------

No comments: