Wednesday, February 15, 2012

அகிலம் போற்றும் அருமை நபிகள் நாயகம்(ஸல்)


அகிலம் போற்றும் அருமை நபிகள் நாயகம்(ஸல்)
அகிலத்தோர்க்கு அருட்கொடையாய்
அவனியில் வந்துதித்து 
ஆதமின் மக்களனைவரிடமும் 
ஆட்கொண்டிருந்த அறியாமைக் கறைகளனைத்தும்
இல்லாதொழித்து அவர்தம் 
இம்மையும் மறுமையும் 
ஈகைநிறை இறைவன் முன்னில் 
ஈட்டுத்தரும் வெற்றிகளாய் 
உறுதிப் பிரமாணம் தந்து அவரின் 
உள்ளமதை ஒளிவாக்கி- இஸ்லாத்தின் 
ஊன்றிப் பிடிக்கும் வேர்களாய் 
ஊக்கம்நிறை தீரர்களாய் உருவாக்கி-அவர்தம்
எண்ணவியலா தியாகங்களனைத்தும் 
என்றும் தீனுல் இஸ்லாத்திற்காய் 
ஏகத்துவம் தரணியில் படர்வதற்காய்
ஏற்று மனமுடன் ஈந்தச் செய்து
ஐயமற்ற அரும் வாழ்க்கை நெறியை 
ஐந்து கடமைகளில் இனிதே மொழிந்து-மேதினியில் 
ஒப்பிலா ஓரிறைக் கொள்கை ஊன்றி 
ஒப்பற்ற மனிதப் புனிதராய் வாழ்ந்து
ஓய்வின்றி உம்மத்திற்காய் தன் உழைப்பை ஈந்து
ஓங்குபுகழ் குர்ஆனை உலகப் பொதுமறை ஆக்கி
ஒளடதமாய் இம்மையில் நம் உள்ளப் பிணிகள் நீக்கி-மேலும் 
ஒளடதமாய் நம்மின் மறுமைத் துயரங்களும் நீக்கவிருக்கும் 
அருமை நபி நாதர் எங்கள் மஹ்மூதாம்
முத்து முஹம்மது அவர்கள் மீது 
மொத்தமாய்ப் பொழியட்டும் என்றென்றும் 
இறையோனின் இனிய சலாம்கள்...


---------------------------------------------------------------

No comments: